தனது செல்லப்பிராணி நாய்க்கு பிறந்த நாள்.. 100 கிலோவில் கேக் வெட்டி.. 4000 பேருக்கு விருந்து.! - Seithipunal
Seithipunal


தனது வளர்ப்பு நாயின் பிறந்தநாளை கொண்டாட 100 கிலோ கேக் வெட்டி, 4000 பேருக்கு விருந்தளித்த தொழிலதிபர்.

கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சிவப்பா மர்தி. இவர் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். இவர் தனது வீட்டில் செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய்க்கு கிராஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இந்த வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, 4000 பேருக்கு விருந்து அளித்துள்ளார்.                        

அதன் பின்னர் 100 கிலோ எடை கொண்ட கேக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி வளர்ப்பு நாயின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி உள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pet dog birthday celebration 100 kg cake cutting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->