கொரோனா தனிமைக்காக மரங்களில் வசிக்கும் மனிதர்கள்.! காரணம் என்ன தெரியுமா?!
Peoples stay on tree
வைரஸ் பரவுவதை தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த மேற்குவங்கத்தில் இருக்கும் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த கிராம வாசிகள் தங்களுடைய கிராமத்திற்கு திரும்பியவுடன் விஞ்ஞானிகளின் முறைப்படி 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள நினைத்தனர்.
அங்கே வீடுகளில் தனி அறைகள் கிடையாது எப்படி அவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள முடியும் என்று யோசித்து பின்னர் அப்பகுதியில் இருந்த பெரிய பெரிய மரங்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று அந்த மரத்தில் 14 நாட்கள் தங்குவதற்கான முகாம்களை அமைத்து இருக்கின்றனர்.
தற்போது அதில் தங்கி தங்களைத் தனிமைப் படுத்தி வருகின்றனர். இது போன்று இதற்கு முன்பு யானைகள் வருகின்றனவா என கண்காணிக்க இந்த மரங்கள் பயன்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.