பாக். தொலைக்காட்சியில் இந்திய மூவர்ணக்கொடி.. மாஸ் காட்டிய ஹேக்கர்கள்.!!
Pakistan Tv Hacked by Indian hackers and Play Indian Nation Flag
இந்தியா - பாகிஸ்தானிற்கு இடையே பல வருடங்களாக பிரச்சனை நடந்து வருகிறது. மேலும், பாக்கிஸ்தான் நாடு பயங்கரவாதிகளை வளர்த்து, அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து வருகிறது.
இதனால் ஏற்படும் பல சோகங்கள் இன்றளவும் தொடர்ந்து வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவமும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன்காரணமாக எல்லையில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஹேக்கர்களின் மாஸ் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் குறிப்பிட்ட தொலைக்காட்சியை சில நிமிடங்களுக்கு ஹேக் செய்த ஹேக்கர்கள், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என்று இந்திய மூவர்ணக்கொடியை ஒளிபரப்ப செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்த வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Pakistan Tv Hacked by Indian hackers and Play Indian Nation Flag