இந்திய எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான்.. தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள்.!!
pakistan encroachment again india border
ஜம்மு-காஷ்மீர் எல்லையான பூஞ்ச் மாவட்டத்தில் பாலாகோட் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் 4 முறை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகள் மீது துப்பாக்கியால் சுடுதல், சிறிய ரக குண்டுகள் வீசியும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், எல்லைப்பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவம் திருப்பி தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டம் மற்றும் ரஜௌரி மாவட்டத்திலுள்ள சுந்தா்பனி பகுதிகளுக்குள்பட்ட கஸ்பா, கிருஷ்ணகதி, பாலாகோட், மான்கோட், மென்தா், கிா்ணி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது எனக் கூறினார்.
English Summary
pakistan encroachment again india border