வெளிநாடுக்கு தப்பிச் செல்வார் என சிபிஐ வாதம் - ப.சிதம்பரம் மறுப்பு..!
P. Chidambaram Case Investigation
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பான வழக்கு பதிவால் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிக்கிய ப.சிதம்பரம் மீண்டும் அந்த வழக்கு தொடர்பான ஜாமீன் மனு இன்று விசாரணை நடைபெறுகிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அதற்கு சிபிஐ தரப்பில் ஆட்சேபனை தெரிவித்துள்ள நிலையில், தனது சொந்த நலனுக்காக நிதி அமைச்சர் பதவியை பயன்படுத்தியதாக சிபிஐ கூறிய குற்றச்சாட்டையும் சிதம்பரம் இந்த மனுவில் மறுத்துள்ளார்.
ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English Summary
P. Chidambaram Case Investigation