6 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை.. புரட்டி எடுக்கப்போகும் மழை.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. தற்போது அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு, இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அதி தீவிர கனமழை சூழ்நிலை உருவாகி இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், ஆகஸ்ட் 4ஆம் தேதி திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

orange alert in kerala 6 districts


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->