சித்தார்த்திடம் கைவரிசை காட்டிய ஓ.எல்.எஸ்.!! விரக்தியில் மனமுடைந்த சித்தார்த்., உதவிய நண்பர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களை பொறுத்த வரையில் விலை குறைந்த பொருட்களை வாங்குவதில் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இணையத்தின் வழியாக வாங்கும் பொருட்களுக்கு அதிகளவில் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைவது வழக்கமாக தற்போதுள்ள சூழ்நிலையில் தொடர் கதைகளாகி வருகிறது. 

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்த சித்தார்த் என்பவர் ஓ.எல்.எஸ். நிறுவனத்தின் மூலமாக விலைக்கு வந்த விலைஉயர்ந்த தொற்றுத்திரை அலைபேசியை வாங்குவதற்கு சம்மந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு பேசியுள்ளர். அந்த அலைபேசியின் சந்தை விலை ரூ.69 ஆயிரம் ருபாய் என்பதாலும்., இணையத்தில் அந்த அலைபேசியின் விலை ரூ.26 ஆயிரத்து 500 என்பதால் வாங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்த அலைபேசியை விற்பனை செய்யும் நபருக்கு தொடர்பு கொண்டு பேசிய சித்தார்த் அலைபேசி குறித்து கேட்ட போது., எதிரில் பேசிய நபர் பெங்களூரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்து பணத்தை வழங்கி விட்டு அலைபேசியை பெற்று செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைவாக விமான நிலையத்திற்கு விரைந்த சித்தார்த் அவருக்கு தொடர்பு கொண்டு வந்த விசயத்தை தெரிவித்துள்ளார். 

அந்த நேரத்தில் இருந்த பணிசுமையின் காரணமாக வர இயலாது என்றும்.,  முதல் தவணையாக ரூ.5 ஆயிரத்தை சுங்க பிரிவில் செலுத்திவிட்டு வாங்கிவிட்டதாகவும்., மீதி தொகையை வாங்கி கணக்கில் செலுத்துமாறும் தெரிவித்துள்ளார். ஆர்வக்கோளாறில் மிகுந்திருந்த சித்தார்த் அவருக்கு பணத்தை செலுத்தியுள்ளார். மேலும்., சித்தார்த்தை மீண்டும் தொடர்பு கொண்ட நபர் தனது கணக்கில் பணம் வரவில்லை என்று கூறி மொத்தம் ரூ.74 ஆயிரத்தை நூதன முறையில் கொள்ளையடித்துள்ளார். 

பணத்தை செலுத்திவிட்டோம் தனது அலைபேசி வந்துவிடும் என்று வெகு நேரம் விமானநிலையத்திலேயே காத்திருந்த சித்தார்த் ஏமாற்றத்துடன் திரும்பவே., விஷயம் குறித்து தனது நண்பரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர்., அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் மனு அளித்தார். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ONLINE SHOPPING FRAUD IN BANGALORE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->