இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு.. அரசு வெளியிட்ட அறிவிப்பு.!
one week full lockdown in delhi
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நோய்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் 167 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு டெல்லியில் உள்ள மாவட்ட அனைத்து நீதிபதிகளும் அந்தந்த நீதிமன்றங்களின் அவசர வழக்குகளை மட்டுமே வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா அதிகரிப்பு காரணமாக டெல்லியில் இன்று இரவு முதல் வரும் 26-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதியம் டெல்லி மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
English Summary
one week full lockdown in delhi