மோடிக்கு சொத்தை எழுதி வைக்க முயலும் மூதாட்டி.! கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த வக்கீல்.!
old women want to property changing on modi
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன்னுடைய சொந்த நிலத்தை பிரதமர் மோடிக்கு எழுதி தருவதாக பேசுகின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
உத்தரபிரதேச மாநிலத்தில் வசிக்கின்ற பிட்டன் தேவி எனும் 85 வயது மூதாட்டி, அந்தப் பகுதியில் இருக்கின்ற வக்கீல் ஒருவரை சந்தித்து, தன்னுடைய பெயரில் இருக்கின்ற நிலத்தை மோடி பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மூதாட்டியிடம் விசாரித்ததில், 'தன்னுடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதன்பின் என்னுடைய மகன்கள் என்னை கவனித்துக் கொள்ளவில்லை,' என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு வழங்குகின்ற ஓய்வூதியத்தை வைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், மோடி சிறப்பாக அனைத்து பணிகளையும் செய்து மூதாட்டி பாராட்டிவிட்டு எனவே தான் தனது சொத்துக்களை அவருக்கு எழுதி வைக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
old women want to property changing on modi