மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவர் தற்கொலை, காவல்துறையினர் விசாரணை..!
Old man Committed Suicide
மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரியானா மாநிலம், குருகிராமம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 70 வயது மதிக்கதக்க ஒருவர் அங்கு உள்ள ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் கடிதம் ஒன்றை எழுதி சட்டையில் வைத்துள்ளார். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரிடம் இருந்த ஐடி கார்டை வைத்து அவருடைய பெயர் ராம் என்பதும் அவரது ஊர் கான்பூர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், அவர் காலையில் நடைபயிற்சிக்கு வரும் போது தற்கொலை செய்துகொண்டார் எனவும் அவரது ட்தற்கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
English Summary
Old man Committed Suicide