கல்யாண வாக்குறுதி தாம்பத்தியம் பலாத்காரம் ஆகாது.. நீதிமன்றம் பரபரப்பு கருத்து.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருக்கும் கோராபுரட் மாவட்டத்தை சார்ந்த மாணவனின் மீது, அப்பகுதியை சார்ந்த 19 வயது பெண்மணி பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்திருந்தார். மேலும், இவர்கள் இருவரும் ஒரே கிராமத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், இருவருக்குள் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து, இருவரும் பழகி வந்துள்ளனர். 

இந்த பழக்கமானானது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் நான்கு வருட பழக்கத்தை அடுத்து இறுதியில் பெண் கர்ப்பமாகியுள்ளர். மேலும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை மற்றும் அப்பாவித்தனத்தை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பெண் கர்ப்பமான நிலையில், வற்புறுத்தி மாத்திரையை சாப்பிட சொல்லி கருக்கலையை வைத்துள்ளான். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக காமுகன் சிறையில் இருந்த நிலையில், ஜாமீன் கேட்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளான். மாணவனிற்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, " எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத, நம்பிக்கையின் அடிப்படையிலான உறவு பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கொண்டு வர இயலாது என்றும், இதுபோன்ற வழக்குகளின் பதிவுகள் எந்த அடிப்படையில் எடுத்து கொள்ளப்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் திருமணம் என்ற ஆசை வார்த்தையில் விருப்பப்பட்டு தாம்பத்தியம் மேற்கொள்கின்றனர் என்றும், பாலியல் பலாத்கார சட்டம் சமூக பின்தங்கிய மக்களின் அவல நிலையை நிவர்த்தி செய்ய தவறுவதாகவும் " தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha girl sexual abuse court judgment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->