சோத்துல 10 பேருக்கு விஷம்.. தனக்கு விஷ ஊசி.! இறந்துபோன நர்ஸ்.. அதிரவைக்கும் காரணங்கள்.!
nurse killed 10 and suicide her self in rajasthan
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானில் வந்து குடியேறினர். அவர்களில் பிரியா என்ற பெண் மட்டும் நர்ஸ் வேலை செய்து சம்பாதித்து இருக்கின்றார். அவரின் குடும்பத்தினர் அனைவரும் அந்த வருமானத்தில் சாப்பிட்டு வந்துள்ளனர்.
ஒரு வயதான மாமியார் உட்பட 6 பேரக் குழந்தைகள் அந்த குடும்பத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் நர்ஸ் பிரியா அனைவருக்கும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட அனைவரும் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்து விட அதன் பின்னர், அந்த நர்ஸ் தன்னுடைய உடலில் விஷ ஊசி ஒன்றை செலுத்திக்கொண்டு தற்கொலை செய்தார்.
ரவி என்ற ஒருவர் மட்டும் அந்த குடும்பத்தில் உயிர் தப்பியுள்ளார். இதற்கு காரணம் அவர் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். மறுநாள் இந்த கொலைகள் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த வீட்டில் எஞ்சியிருந்த ரவியிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த பொழுது, வீட்டில் வறுமை தாண்டவமாடியது ஆகவும், அந்த மாமியார் அனைவரையும் கொடுமைப் படுத்தியதாகவும், அத்துடன் குடும்பம் குடியிருமை சிக்கலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
English Summary
nurse killed 10 and suicide her self in rajasthan