நிர்வாண பார்ட்டி.. திட்டம்..! கட்டம் கட்டிய போலீசாருக்கு., காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கோவா வடக்கு பகுதியில் நிர்வாண பபார்ட்டி நடக்கப் போவதாகவும், அதில் பத்து பதினைந்து வெளிநாட்டுப் பெண்கள் பத்திற்கும் மேற்பட்ட இந்திய பெண்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற அறிவிப்புடன் சில நாட்களுக்கு முன்னதாக போஸ்டர் ஒட்டப்பட்டது.

இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து காவல்துறையினர் அப்படி ஒன்று நடக்க கூடாது என தடுக்கும் வகையில் தீவிர தேடலில் ஈடுபட்டனர். தங்கள் சோதனையை தீவிரப்படுத்தி எந்த நிர்வாண பாட்டியையும் கோவாவில் அனுமதிக்க மாட்டோம் என உறுதி கொண்டனர்.

இந்நிலையில் தீவிர விசாரணைக்குப் பின்னர் நிர்வாண போஸ்டர் ஒட்டிய இளைஞர் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் அவர் திடுக்கிடும் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "நான் கல்லூரி படிப்பை பாதியிலேயே முடித்து விட்டேன். பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என்று யோசனை செய்தேன். அப்போது இணையத்தில் சில புகைப்படங்களை எடுத்து போஸ்டர் தயாரித்து ஒட்டினேன். இதற்கு முன் பணம் பெற முடிவு செய்தேன். அதன் மூலம் சபலம் கொண்ட நபர்களிடம் இருந்து ஏராளமான பணத்தை சுருட்டி விட வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டம்.

ஆனால், நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அழைப்புகள் வந்தது. வெளிநாட்டில் இருந்தும் இதற்கான அழைப்பு வந்தது. இவ்வளவு அழைப்புகள் வரும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக எனக்கு பயம் ஏற்பட்டது. நான் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன். ஆன் செய்த பின்னர்தான் போலீசார் கைது செய்தனர்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nude party police arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->