இனி பள்ளிகளில் ஆதார் அட்டையைக் கேட்கவே கூடாது..! கேட்டால், பள்ளியின் அனுமதி ரத்து…!
no need of aadhar for school admission
எங்கு சென்றாலும், ஆதார் அட்டையை உடன் எடுத்துச் செல்வது கட்டாயமான நடைமுறையாக இருந்தது. இதனால், பெருவாரியான மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். அதனால், இந்த ஆதாரை கட்டாயமாக்க கூடாது, என்று வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி, ஆதாரை, அரசு நலத் திட்டங்களுக்கு தவிர, வேறு எதற்காகவும் கட்டாயப் படுத்திக் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால், அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும், என்றும், உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே போல், இனி வரும் காலங்களில், பள்ளிகளில், மாணவர்களைச் சேர்க்கும் போது, ஆதாரைக் கட்டாயப் படுத்தக் கேட்கக் கூடாது. ஆதார் இல்லாத மாணவர்களையும், தாராளமாக பள்ளியில் சேர்க்கலாம். அப்படிக் கட்டாயப் படுத்தி, ஆதாரைக் கேட்கும் பள்ளியின் அனுமதி ரத்து செய்யப்படும், கேட்கும் பள்ளி ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும், என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
யு.ஐ.டி.ஏ.ஐ. எனப்படும் ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பாண்டே கூறி உள்ளார்.
English Summary
no need of aadhar for school admission