"கைலாசா வெறும் நாடு அல்ல.." பக்தர்களை கவர.. புதிய பிட்டாக போடும் நித்தி..!
nithi new video release
நித்தியானந்தா என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என்றும்,நான் தான் மனிதத்தின் எதிர்காலம் என்றும் பேசி இருக்கின்றார்.
இந்திய காவல்துறையினரால் பல்வேறு வழக்குகளுக்காக தேடப்பட்டு வரும் நபர் தான் நித்யானந்தா. இவர் தினமும் எங்கோ இருந்தபடி தன்னுடைய பேஸ்புக் பக்கம் மூலம் ஆன்லைனில் சீடர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில் புதியதாக அவர் தன்னுடைய பேஸ்புக் காலக்கோட்டில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "உண்மையான கைலாசத்தை நான் உருவாக்க இருக்கின்றேன். ஸ்ரீ கைலாசா என்பது ஒரு நாட்டின் குடியுரிமை மட்டுமானது அல்ல. அது ‘எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி.
கைலாசாவில் செல்லப்பிராணிகளையும் இணைக்கலாம். அவற்றுக்கும் கூட சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.என் மீது குற்றம் சுமத்துபவர்கள் முட்டாள்கள் என்றும், நான் தான் மனித குலத்தின் எதிர்காலம் என்றும் அவர் கூறி இருக்கின்றார்.