இன்று முதல் ஊரடங்கு அமல்.. கட்டுப்பாடுகள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் தினந்தோறும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். 

இந்நிலையில், கர்நாடகாவில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கர்நாடகாவில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு இன்று அமலுக்கு வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

இந்த இரவு நேர ஊரடங்கிற்கு கன்னடத் திரையுலகினர், உணவக உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

night lockdown in karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->