டெல்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத ஆதரவாளர்.! மதுரையில் அதிரடி விசாரணை., அடுத்தடுத்து நடக்க போகும் நிகழ்வு.!
NIA officers arrest terrorist supporter investigation going on Madurai
இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் குறித்த தேடலில் என்.ஐ,ஏ அதிகாரிகள் தீவிரமாக இறங்கி அடுத்தடுத்து பல பயங்கரவாதிகளை கைது செய்து வரும் நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்புடைய டெல்லியை சார்ந்த முகமது ஷேக் என்ற நபரை மதுரைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது இந்த விசாரணைக்கு பின்னரே பயங்கரவாத அமைப்பை சார்ந்த ஜஹரான் ஹசிமி சமூக வலைதளத்தின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த சில நபர்களுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்து, அடுத்தடுத்து அதிரடியாக கைது செய்தனர். இந்த விசாரணை தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த மாதத்தின் 12 ஆம் தேதியன்று கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு விரைந்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள உக்கடம் உள்ளிட்ட ஏழு பகுதிகளில் அதிரடியாக அடுத்தடுத்து மேற்கொண்ட சோதனைகளை அடுத்து துப்பாக்கி தோட்டாக்கள், அலைபேசிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த சமயத்தில், கோயம்புத்தூரை சார்ந்த மூவரை பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில் இருப்பதை அறிந்து கைது செய்தனர்.
இது மட்டுமல்லாது பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்த தகவலும் கோயம்புத்தூர் சிறப்பு புலனாய்வு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து, கோயம்புத்தூரை தொடர்ந்து மதுரையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சமாயத்தின் போதே, பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 14 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த 14 பேரில் முகமது ஷேக் என்பவனை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்., டெல்லிக்கு வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
NIA officers arrest terrorist supporter investigation going on Madurai