இரவில் வீடு திரும்பும் பெண்களுக்காக உருவான புதிய திட்டம்..! காவல்துறை அதிரடி..!
new plan for women safety in telangana
பெண்கள் இரவில் பணிக்கு சென்று தனியாக வீடு திரும்பும் போது, கொடூரங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் தெலுங்கானா காவல்துறை அபேய் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அருகில் பெண் மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இரவு நேரத்தில் பெண்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல காவல்துறை சார்பில் அபேய் என்ற திட்டம் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.
மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக எட்டு கார்களும், 70 இருசக்கர வாகனங்களும் தயார் நிலையில் இருக்கிறது. இரவில் தனியாக செல்லும் பெண்கள், 100 என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்கும் பெண்களுக்கு, உடனடியாக வாகனங்களுடன் சென்று வீட்டிற்கு செல்ல உதவியாக இருக்கும்.
இதை தொடர்ந்து, ஒவ்வொரு காரிலும் ஓட்டுனர் தவிர பெண் காவல் அதிகாரி உடலில் பொருத்தப்பட்ட கேமராவுடன் இருப்பார். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த பாதுகாப்பு சேவை தொடரும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
new plan for women safety in telangana