திருமணம் முடிந்த சில மணிநேரத்தில் சுருண்டு விழுந்த மணமகன்.. அலட்சியத்தால் பலியான உயிர்.. பீதியில் உறைந்த உறவினர்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பாலிகன்ச் பகுதியில், கடந்த மாதம் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் 350 க்கும் அதிகமானோர் பங்கேற்ற நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே மணமகன் இயற்கையை எய்தியுள்ளார். இவரின் உடலுக்கு இறுதி மரியாதையை செய்து உறவினர்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். 

இந்த விஷயம் அம்மாவட்ட ஆட்சியருக்கு தெரியவரவே, இறந்துபோன இளைஞரின் சில உறவினர்கள் கொரோனா அறிகுறியுடன் இருந்துள்ளனர். மேலும், பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அச்சப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 400 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 86 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும், திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே மணமகனிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திருமணத்தன்றும் சோர்வுடன் இருந்துள்ளார். இதனை குடும்பத்தினர் பெரிதாக எடுத்து கொள்ளாது, மருந்து மாத்திரைகள் கொடுத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, மக்கள் பீதியில் இருக்கின்றனர். திருமண நிகழ்வில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என்றும், அரசின் வழிமுறையை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Married man died positive corona family member panic


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->