பஞ்சாயத்துக்கு வரும் நேபாளம்.. சர்ச்சையை ஏற்படுத்து வகையில் கருத்து..!!
Nepal PM says Indian corona virus so danger than China and Italy virus
நேபாளம் இந்திய பகுதிகளை தன்னுடன் இணைத்து புதிய வரைபடம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவிற்கு எதிராக சர்ச்சையை கிளப்பும் வகையிலும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் கேபி சர்மா ஒளி, நேபாள நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் இல்லை. வெளியூரில் இருந்து வந்த நபர்களின் காரணமாக நேபாளத்தில் கொரோனா பரவியுள்ளது.
நேபாளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைப்பது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
தேசிய அளவிலான ஊரடங்குகளை மீறி சட்டவிரோதமாக நேபாளத்திற்குள் பலர் ஊடுருவியுள்ளனர். இந்தியாவில் இருந்து பலர் வந்ததன் காரணமாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உரிய பரிசோதனை இன்றி உள்ளூர் பிரநிதிநி மற்றும் அரசியல் செல்வாக்கான நபர்களால் இது நடக்கிறது. சீன மற்றும் இத்தாலி நாட்டின் வைரசை விட இந்திய வைரஸ் மிகவும் கொடியது என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nepal PM says Indian corona virus so danger than China and Italy virus