புனே : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பிணமாக மீட்பு - தற்கொலையா? சதியா? போலீசார் விசாரணை.!
near pune seven peoples body rescue in river
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம் யவத் கிராமப்பகுதியில் உள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் ஒரு நபரின் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் மூன்று நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதன் பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், முதல் கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டதில், நேற்று மேலும் மூன்று சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் இது திட்டமிட்ட சதியா? அல்லது தற்கொலை? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தியதில், பிணமாக மீட்கப்பட்டவர்கள் காம்காவ் பகுதியை சேர்ந்த மோகன் உத்தம் பவாரின் குடும்பத்தினர் என்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் 7 பேரின் மரணம் மற்றும் அதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சீனியர் தலைமை காவலர் ஒருவர் தெரிவித்ததாவது, "ஆற்றில் ஒவ்வொருவரின் உடல்களும் சுமார் 200 முதல் 300 மீட்டர் இடைவெளியில் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து பல கோணங்களிலும் விசாரணை செய்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
near pune seven peoples body rescue in river