மகாராஷ்டிரா : கணவரை கொன்று வீசி சென்ற மனைவி.! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் கோண்டலே-பந்தன்பாடா கிராமம் அருகே கடந்த 20-ந்தேதி ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அந்த நபர் கழுத்தை நெரித்து தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

அதன் படி, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், போலீசாருக்கு அந்த நபரின் மனைவி உள்பட ஐந்து பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. அதாவது, கொலை செய்யப்பட்ட அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த அவரது மனைவி அந்தக் கள்ளக்காதலை கைவிடுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபர் அதனை மறுத்துள்ளார். 

இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவரது மனைவி நான்கு பேரின் உதவியுடன் அந்த நபரைக் கொன்று, உடலை வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மனைவி உள்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra wife arrested for kill husband


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->