மகாராஷ்டிரா : லஞ்சம் வாங்கிய இரண்டு போலிஸ் ஏட்டுகள்.! கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அச்சோலே காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் போலீஸ் ஏட்டுகள் யோகேஷ் கோகுல் மற்றும் ஜிதேந்திர பன்சோடே. 

இவர்கள் இருவரும் வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை கைது செய்யாமல் இருப்பதற்கு ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக இவர்கள் அந்த நபரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக தெரிவித்த அந்த நபர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் படி,  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புகார்தாரரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பினர். அதன் படி, அவர் நேற்று முன்தினம் இரவு போலீஸ் ஏட்டுகளை நேரில் சந்தித்து லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். 

அப்போது அந்த பகுதியில், மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏட்டுகள் யோகேஷ் கோகுல் மற்றும் ஜிதேந்திர பன்சோடே உள்ளிட்ட  இரண்டு பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப்பதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra two police officers arrested for take bribe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->