மகாராஷ்டிரா : கட்டுமான ஒப்பந்ததாரர் மீது துப்பாக்கிச் சூடு முயற்சி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை குர்லா கப்பாடியா நகர் பகுதியை சேர்ந்தவர் கட்டுமான ஒப்பந்ததாரான சூரஜ் சிங். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் மாநகராட்சி எல். வார்டு அலுவலகத்திற்கு தனது நண்பருடன் காரில் சென்றுள்ளார். 

அப்போது அந்த காரை இரண்டு நபர்கள் வழிமறித்துள்ளனர். அதில், ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் குறி தவறியதால் கட்டுமான ஒப்பந்ததாரர் சூரஜ் சிங் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். 

அதன் பின்னர் அங்கிருந்து காரில் வேகமாகச் சென்று வகோலா போலீஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்த விவரத்தைத் தெரிவித்தார். ஆனால், சம்பவம் நடைபெற்ற இடம் குர்லா காவல் நிலையத்திற்கு உட்பட்டதால் வழக்கை அந்த காவல் நிலையத்திற்கு மாற்றினர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சூரஜ் சிங் சமீபத்தில் பாந்திரா-தகிசர் இடையே நடைபாதை கட்டும் பணிக்காக ரூ.45 கோடி அளவில் டெண்டர் பெற்றார். 

இதற்கிடையில் அவரது டெண்டர் ஒப்பந்ததை திரும்ப பெறும்படி சமீர் சாவந்த் மற்றும் கணேஷ் சுகல் உள்ளிட்டோரிடம் இருந்து சூரஜ்க்கு செல்போனில் மிரட்டல் வந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களை பிடிப்பதற்காக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra two peoples gun shoot attack to building contracter man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->