தோழியும் - தோழரும் என பேசி, குழந்தையை கடத்திய கொடூரம்.. ஊரைக்கூட்டிய தாய்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை தலோஜா பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 35). இவரது மனைவி ரேஷ்மா. இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் ஏதுமில்லை. 

இவர்கள், நேற்று காலை மும்பையில் உள்ள குர்லா பகுதியில் வசிக்கும் தோழியின் வீட்டிற்கு, இந்த தம்பதிகள் சென்றுள்ளனர். அங்கு வீட்டிலிருந்து தோழியின் ஒரு வயது குழந்தைக்கு புதிய ஆடை மற்றும் சாக்லெட் வாங்கி கொடுப்பதாக கூறி, இப்ராகிம் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். 

பின்னர் மீண்டும் வெகுநேரமாகியும் இப்ராகிம் வராததை அடுத்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், ரேஷ்மா வீட்டிலேயே இருந்த நிலையில், தான் அவர்களை தேடி அழைத்து வருவதாகவும் கூறிச் சென்றுள்ளார். 

இந்நிலையில், குழந்தையை தூக்கிச் சென்ற இப்ராகிம் மற்றும் இருவரையும் கூட்டி வருவதாக கூறிய ரேஷ்மா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத அடுத்து, சந்தேகமடைந்த பெண்மணி அவர்களை தொடர்புகொள்ள அலைபேசியை தேடியுள்ளார். ஆனால், அவர்கள் அலைபேசியையும் திருடி சென்றுள்ளனர். 

இதனையடுத்து பெண்மணி உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த்துள்ளார். தகவலை அறிந்ததும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அங்குள்ள மால்வாணி பகுதியில் இருந்த தம்பதியை கைது செய்து குழந்தையை மீட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையை தம்பதியிடம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Navi Mumbai Child girl Kidnapped and Rescued by Police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->