காதல் ராணிக்கு தடை.., தாய்க்கு கொடுத்த விடை..! "நோ" சொன்ன மம்மியை நோகடித்த காதல் ஜோடி.!
murder in agra for love
மகன் காதலித்த பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறிய தாயை காதல் ஜோடி சேர்ந்து கொலை செய்த சம்பவம் ஆக்ராவில் அரங்கேறியிருக்கிறது.
ஆக்ராவில் சிவம் ஷர்மா என்ற இளைஞரும், ராணி என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கு, சர்மாவின் அம்மா லஷ்மி தேவி எதிர்ப்பு தெரிவித்து இருந்துள்ளார். இருப்பினும் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், இருவரும் நகை பணத்துடன் வீட்டை விட்டு ஓட திட்டமிட்டு இருந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவில் சர்மா தன்னுடைய வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு காதலி ராணியோடு ஓட முயற்சித்து இருக்கின்றார். அப்பொழுது அவருடைய தாயார் அதனை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஷர்மா அவருடைய தாயை தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்து விட்டு இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவர அவர்கள் சர்மா மற்றும் காதல் ராணியை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.