2 ரூபாயால் நடந்த சோகம்... துடி துடிக்க அரங்கேறிய சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


ஆந்திராவைச் சேர்ந்தவர் சுவர்ணராஜ். அந்த பகுதிகளில் கட்டிட வேலை செய்து வந்த இவர் நேற்று முந்தினம் அருகில் இருந்த வாடகை சைக்கிள் கடைக்குச் சென்று தனது சைக்கிளுக்கு காற்றடித்துள்ளார். 

கடை உரிமையாளர், சுவர்ணராஜின் சைக்கிளுக்கு காற்றடித்து விட்டு, கூலியாக 2 ரூபாய் கேட்டிருக்கிறார். கையில் 2 ரூபாய் இல்லாததால் எழுந்த வாக்குவாதத்தில் கடை உரிமையாளர் சம்பாவை அடித்திருக்கிறார் சுவர்ணராஜ். 

Image result for arrest seithipunal

கடைக்கு அப்போது வந்திருந்த சம்பாவின் நண்பர் அப்பா ராவ், தன் கண்ணெதிரில் நண்பனை இளைஞர் ஒருவர் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு,  அருகில் இருந்த இரும்பு கம்பியால் சுவர்ணராஜின் தலையில் அடித்துள்ளார்.  

இதில் படுகாயம் அடைந்த சுவர்ணராஜை அருகில் இருந்தவர்கள் மருவத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிக்சை பலனின்றி சுவர்ணராஜ் இறந்தார். தற்போது இந்த கொலை விவகாரத்தில், சைக்கிள் கடை உரிமையாளர் சம்பாவை போலீசார் கைது செய்து உள்ளனர். நண்பருக்காக சுவர்ணராஜை அடித்த அப்பாராவை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder for two rupees


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->