சிறுமியை விபசார கும்பலிடம் இருந்து மீட்டு., காசுக்காக மீண்டும் விபசார கும்பலிடம் விற்பனை செய்த காவல் அதிகாரி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களேயே நடைபெற்று வருகிறது என்பதுதான் பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது. இந்த நிலையில்., விபசாரத்தில் ஈடுபடத்தப்பட்ட பெண்களை மீட்ட காவல் அதிகாரி மீண்டும் மற்றொரு விபச்சார கும்பலிடம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நாகப்படாவில் மூத்த காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் குவாலாந்தர் ஷேக் (வயது 68). இவர் அங்குள்ள அவுரங்காபாத்தில் வசித்து வரும் நிலையில்., கடந்த 2004 ஆம் வருடத்தில் நாகப்படாவில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய நேரத்தில் காமேந்திரபுரம் பகுதியில் சோதனை செய்தனர். 

sexual harassment, sexual abuse

இந்த நேரத்தில்., விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மூன்று சிறுமிகளை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்காமல் ரவீந்திர பாண்டே (வயது 60) என்ற விபசார தராகரின் மூலமாக விற்பனை செய்துள்ளான். இதற்கு பின்னர் கடந்த 2007 ஆம் வருடத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில்., விபசார கும்பலின் பிடியில் இருந்த சிறுமி ஒருவர் குற்றப்பிரிவு அதிகாரிகளின் பிடியில் சிக்கினார். 

இதற்கு பின் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., காவல் துறை அதிகாரியே சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் உண்மையானது வெளிவந்தது. தற்போது காவல் அதிகாரி மற்றும் விபசார நபர் கைது செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai police sell a girl to prostitute police investigation going on


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->