உடல்நலம் சரியில்லாத மகளை, தோளில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்த தந்தை.!!
Mumbai father taking daughter hospital
பெண்கள் குழந்தைகளாக இருந்தாலும் சரி, 28 வயது இளம்பெண்ணாக இருந்தாலும் சரி.. பெண்களை பெற்ற தந்தையருக்கு அவர்கள் என்றுமே குழந்தைகள் தான். தான் எவ்வுளவு கஷ்டத்தை சந்தித்தாலும், தனது மகளின் புன்னகையில் மனது நிறைந்து வாழ்வார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கோவண்டி குடிசைப்பகுதியை சார்ந்தவர் முகமது ரபி (வயது 70). இவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். கரோனா ஊரடங்கின் காரணமாக பணிகள் இல்லாததால், வருமானத்தை இழந்து தவித்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில், முகமதின் 17 வயது மகளிற்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, மகளை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரிடம் வசதி இல்லை. மேலும், அங்குள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்று வர போக்குவரத்தும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
இதனையடுத்து பக்கத்து வீட்டாரிடமும் கேட்க மனமில்லாது, மகளை தோளில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் மகளுக்கு சிகிச்சை அளித்த பின்னர், தோளில் சுமந்தபடியே வீட்டிற்கு திரும்பியுள்ளார். மொத்தமாக தனது மகளை 13 கிமீ தோளில் சுமந்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Mumbai father taking daughter hospital