உடல்நலம் சரியில்லாத மகளை, தோளில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்த தந்தை.!! - Seithipunal
Seithipunal


பெண்கள் குழந்தைகளாக இருந்தாலும் சரி, 28 வயது இளம்பெண்ணாக இருந்தாலும் சரி.. பெண்களை பெற்ற தந்தையருக்கு அவர்கள் என்றுமே குழந்தைகள் தான். தான் எவ்வுளவு கஷ்டத்தை சந்தித்தாலும், தனது மகளின் புன்னகையில் மனது நிறைந்து வாழ்வார்கள். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கோவண்டி குடிசைப்பகுதியை சார்ந்தவர் முகமது ரபி (வயது 70). இவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். கரோனா ஊரடங்கின் காரணமாக பணிகள் இல்லாததால், வருமானத்தை இழந்து தவித்து வந்துள்ளார். 

இந்த சமயத்தில், முகமதின் 17 வயது மகளிற்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, மகளை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரிடம் வசதி இல்லை. மேலும், அங்குள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்று வர போக்குவரத்தும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் தவித்து வந்துள்ளார். 

இதனையடுத்து பக்கத்து வீட்டாரிடமும் கேட்க மனமில்லாது, மகளை தோளில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் மகளுக்கு சிகிச்சை அளித்த பின்னர், தோளில் சுமந்தபடியே வீட்டிற்கு திரும்பியுள்ளார். மொத்தமாக தனது மகளை 13 கிமீ தோளில் சுமந்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai father taking daughter hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->