மும்பை: 26 மணி நேரம்., வாழ்வா சாவா பெரும் போராட்டம்! தப்பித்த பாட்டியும், சிறுவனும்!
mumbai building collapse
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டம் மகாட் என்ற பகுதியில் கடந்த 24ம் தேதி மாலை தாரிக் கார்டன் கட்டடம் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தது. 47 குடியிருப்புகளை கொண்டிருந்த அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 200-க்கும் அதிகமானோர் வசித்து வந்துள்ளனர்.
கட்டிடத்தில் மொத்தம் எத்தனை பேர் வசித்து வந்தனர் என்ற தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை. கட்டிடம் இடிந்து விழும் சிலமணி நேரத்திற்கு முன் தான் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போது வரை 60 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். 7 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீதமுள்ளவர்களை மீட்க்கும் பணியானது விரைந்து நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள நபர்கள் பத்திரமாக வர வேண்டும் என்று மக்கள் பிரார்த்திக்க துவங்கியுள்ளனர்
இந்நிலையில், இந்த விபத்தில் 26 மணி நேரத்துக்கு பிறகு மூதாட்டி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்புப் பணிகள் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 26 மணிநேரத்துக்கு பிறகு ஒரு மூதாட்டியும், 4 வயது சிறுவனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.