திருமணத்திற்கு மறுத்த பெண்ணை கொன்று தூக்கி, மரத்தில் தொங்கவிட்ட கொடூரன்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!!
Mumbai Bhiwandi girl Murder case police investigation
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் கடந்த 9 ஆம் தேதியன்று மரத்தில் பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்தும் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த விசாரணையில், தூக்கில் சடலமாக மீட்கப்பட்டவர் கல்யாண் பகுதியை சார்ந்த 24 வயது பெண்மணி என்றும், இவருக்கு திருமணம் முடிந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த பெண்மணி வீட்டு வேலை செய்து வந்த நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பெண்மணியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, தூக்கில் பிணமாக தொங்கவிடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண்ணின் குடும்பத்தினரிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், கல்யாண் கோவிந்தவாடி பகுதியை சார்ந்த தீபக் (வயது 31) என்ற வாலிபர், பெண்மணியுடன் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. தீபக்கை கைது செய்து விசாரணை செய்தனர்.
இதில், ஓட்டுநராக பணியாற்றி வரும் தீபக்கிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீபக் பெண்மணியிடம் திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், பெண்மணி சகோதரத்துவத்துடன் பழகி வந்ததால், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் தீபக் பெண்மணியை கொலை செய்து, தற்கொலை போல பாவிக்க மரத்தில் பிணமாக தொங்கவிட்டதும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Mumbai Bhiwandi girl Murder case police investigation