மசூதியில் பெண்களுக்கு தடை? உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம்.! - Seithipunal
Seithipunal


மசூதிகளில் தொழுகைக்கு வரும் பெண்களுக்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்து கோவில், பார்சி கோவில், மசூதி என வழிபாட்டு இடங்களில் பெண்கள் நுழைய தடை விதிக்கும் வழக்கங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் மசூதிகளில் பெண்கள் நுழைய எந்த வித தடை இல்லை, ஆனால் ஆண், பெண் கூட்டுத் தொழுகையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த விவகாரம் முழுக்க முழுக்க மத வரம்புக்கு உட்பட்டது அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் முழுக்க முழுக்க மத வரம்புக்கு உட்பட்டது அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mulims case investigation in supreme court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->