Mr இந்தியா ஜெகதீஷ்லாட் கொரோனா வைரசுக்கு பலி.. அதிர்ச்சியில் பாடிபில்டிங் வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மக்களின் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், மக்கள் மத்தியில் பிரபலமடைந்த வீரர்களுக்கும், நடிகர்களும், அரசியல்வாதிகளும் என பாரபட்சமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய ஆணழகன் ஜெதீஸ்லாட் கொரோனாவால் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. தேசிய ஆணழகன் போட்டியில் வெற்றியடைந்த ஜெகதீஷ்லாட் (வயது 34), தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவில் வசித்து வந்தார். 

பின்னர், மும்பையில் உள்ள வீட்டிற்கு வந்து வசித்து வந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சர்வதேச ஆண்கள் போட்டியில் வெள்ளி பதக்கம், மிஸ்டர் இந்தியா போட்டியில் தங்கப்பதக்கம் என சாதனை செய்த ஜெகதீஷ்லாட் குறைந்த வயதில் கொரோனாவால் பலியாகியுள்ளது, அவரது நண்பர்கள் மட்டுமல்லாது பாடி பில்டிங் வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mr India Jagadeshlat Died on Corona Virus Test Positive 1 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->