எலி இறைச்சி வேண்டுமா?.! ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சந்தைக்கு சென்று பட்டாணி குருமாவோடு ரோஸ்டாக சாப்பிட்டு வாருங்கள்.!!
MOUSE FOOD DO WANT GO TO THIS PLACE
அசாம் மாநிலத்தில் உள்ள பாக்சா மாவட்டத்தில் உள்ள வாராந்திர கிராம சந்தையில் எலிகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் எலி இறைச்சி மசாலா பட்டாணி குழம்பாகவும்., பொன்னிறத்தில் வறுத்தெடுக்கப்பட்ட ரோஸ்ட்டாகவும் கிடைக்கிறது.
இந்த எலி இறைச்சியானது வாரத்தின் இருந்து நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிரதானமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள சில பழங்கால இனக்குழுவின் மக்களிடையே பாரம்பரிய உணவாகவும் இந்த எலி இறைச்சி உணவானது சாப்பிடப்பட்டு வருகிறது.
அங்குள்ள மக்களால் அதிகளவில் விரும்பி விற்பனை செய்யப்படும் இந்த எலி இறைச்சியின் ஒரு கிலோ விலையானது ரூ.200 ஆக உள்ளது. மேலும்., இந்த எலி இரைச்சக்கலை வாங்குவதற்க்காக அங்குள்ள குமரிகிகடா கிராமத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதலாகவே குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கிராமத்தில் உள்ள சந்தையில் கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை விட எலி இறைச்சியானது மிகவும் பிரசித்தி பெற்று அதிகளவு மக்களால் விரும்பப்படுகிறது. இந்த எலி இறைச்சிக்காக அங்குள்ள உள்ளூர் மக்கள் அதிகளவில் விளை நிலங்களில் இருக்கும் எலிகளை வேட்டையாடுகின்றனர்.
இந்த சந்தையில் தினமும் 10 கிலோ முதல் 20 கிலோ வரை எலி இறைச்சிகளானது விற்பனை செய்யப்படுவதாகவும்., அதிகளவு மக்கள் விருப்பத்துடன் வாங்கி சென்று சமைத்து உண்டு வருவதாகவும் எலி இறைச்சியை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
MOUSE FOOD DO WANT GO TO THIS PLACE