இரத்தம் சொட்ட சொட்ட அம்மாதான் தூக்கிட்டு போனாங்க.! 3 வயது சிறுவனால் சிக்கிய தாய்!! வெளியான பகீர் சம்பவம்!! - Seithipunal
Seithipunal


கேரளா தொடுபுழா பகுதியில் வசித்து வருபவர் அர்ச்சனா.கணவரை இழந்த  இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் கணவர் இறந்தபிறகு அர்ச்சனா தனது உறவினரான அருண் ஆனந்த் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்பொழுது கடந்த மாதம் அர்ச்சனாவும், அருண் ஆனந்தும்  இரு பிள்ளைகளையும் வீட்டு அறையில் வைத்து பூட்டிவிட்டு,  ஹோட்டலில் சாப்பிடசென்றுள்ளனர்.

பின்னர்  சாப்பிட்டுவிட்டு அவர்கள் இருவரும் திரும்பி வந்தபோது, குழந்தைகள் இருவரும் தூங்கியுள்ளனர். இந்நிலையில் அர்ச்சனாவின் இரண்டாவது மகனான மூன்றரை வயது சிறுவன் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துள்ளான்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த அருண், அவனை ஏன் கழிவறைக்கு அழைத்து செல்லவில்லை என அந்த சிறுவனின் அண்ணனைத் அடித்து கடுமையாக தாக்கியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ,மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அருணை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து 3 வயது சிறுவனிடம் போலீசார் விசாரித்ததில் அவன் கூறியதாவது, என் அண்ணன் பப்பியை அப்பா தலையில் அடித்து, காலைப் பிடித்து தூக்கி எறிஞ்சாங்க. . அதில் சுவற்றில் தலை முட்டி பப்பி கீழே விழுந்தான்.அப்பறம் எழுந்திருக்கவே இல்லை. நிறைய ரத்தம் ஊற்றியது. பின்னர் அம்மாவும், அப்பாவும் பப்பியை காரில் தூக்கிட்டு எங்கேயோ போய்ட்டாங்க  என கூறியுள்ளான்.

இதனை தொடர்ந்து போலீசார் அருணிற்கு துணையாக இருந்த  அர்ச்சனாவை தற்பொழுது கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother killed son for urinating on bed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->