மாடு மேய்க்க சென்றபோது பரிதாபம்.! குளத்தில் மூழ்கி தாய்-மகள் பலி
Mother daughter drowned in pond in chikkamakallur Karnataka
கர்நாடகா மாநிலத்தில் குளத்தில் மூழ்கி தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் வட்ரேஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷோபா(40). இவருக்கு வர்ஷா(7), சேத்தன்(5) என்ற ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ஷோபா நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருடன் மகனும், மகளும் இருந்துள்ளனர்.
இதையடுத்து குளத்தை தாண்டிதான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால், முதலில் மகள் வர்ஷாவை நீரில் நடந்து செல்லும்படி தாய் கூறியுள்ளார். அப்பொழுது சிறுமி நடந்து சென்ற போது திடீரென ஆழமான பகுதிக்குள் கால் வைத்ததால் நீரில் மூழ்கியுள்ளார்.
இதைப் பார்த்த தாய் சத்தம் போட்டு மகளை காப்பாற்ற முயன்று அவரும் ஆழமான பகுதியில் கால் வைத்துள்ளார். இதையடுத்து இரண்டு பேரும் நீரில் மூழ்குவதை பார்த்த சிறுவன் சேத்தன் குளத்தில் இறங்கிய நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டனர்.
ஆனால் தாய் மற்றும் சிறுமியை மீட்க முடியாததால் இதுகுறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.bமேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mother daughter drowned in pond in chikkamakallur Karnataka