சுற்றுலா சென்ற இடத்தில் தகராறு: மகன், மகளை குளத்தில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை.!
Mother committed suicide after throwing her son and daughter into the pond in Karnataka
கர்நாடகா மாநிலத்தில் மகன், மகளை குளத்தில் வீசிவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் இரேஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா. இவரது மனைவி துர்கம்மா (25). இவர்களுக்கு அஜய் (6), ஷெவந்தி (4) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் அனைவரும் நேற்று மதியும் நாயக்கனஹட்டி கிராமத்தில் உள்ள பெரிய குளத்துக்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன வேதனை அடைந்த துர்காம்மா, இரண்டு குழந்தைகளையும் குளத்தில் வீசிவிட்டு, அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்களும், மல்லிகார்ஜுனாவும் அதிர்ச்சடைந்த நிலையில் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் மூழ்கிய மூன்று பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு துர்காம்மா மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் இரண்டு குழந்தைகளும் மீட்க முடியாத நிலையில், அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டு குழந்தைகளின் உடல்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mother committed suicide after throwing her son and daughter into the pond in Karnataka