14 வயது ஊனமுற்ற மகளை கொன்றுவிட்டு தாய் செய்த விபரீத செயல்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் தனது ஊனமுற்ற மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கணவனை இழந்த 28 வயதான பெண், தனது ஊனமுற்ற 14 வயதுடைய மகளை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்பு அவரும் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்கு போட முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த அவரது சகோதரி மற்றும் அக்கம் பக்கத்தினர், தாயையும் மகளையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்தப் பெண்ணின் மகள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மேலும் தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தனது ஊனமுற்ற மகளை கழுத்து நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother attempted suicide after killing her 14 year old disabled daughter in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->