திருமணத்துக்கு அழைப்பு விடுத்த தொழிலாளி.! மோடி கொடுத்த சர்ப்ரைஸ்.!
modi wishes to new married couples in uttarpradesh
உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் தூம்ரி என்ற கிராமத்தை பாரதப் பிரதமர் மோடி தத்து எடுத்து இருக்கின்றார். இந்த கிராமத்தில் மங்கல் கேவத் என்பவர் ரிக்ஷா தொழிலாளியாக இருக்கின்றார்.
இவர் சமீபத்தில் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். தன்னுடைய தொகுதி எம்பியான பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுக்க விரும்பியிருக்கிறார். எனவே, டெல்லியில் இருக்கும் பிரதமரின் அலுவலகத்திற்கு தன்னுடைய மகளின் திருமண அழைப்பிதழை அனுப்பி வைத்திருக்கின்றார்.
கடந்த 12ஆம் தேதி ரிக்ஷா தொழிலாளியின் மகள் திருமணம் நடைபெற்றது. அந்த நாளில் பிரதமர் மோடியிடம் இருந்து மணமக்களுக்கு வாழ்த்து கடிதம் வந்துள்ளது. இதை பார்த்த தொழிலாளியின் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்து பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
அந்த கடிதத்தில் புது வாழ்க்கையைத் துவங்கும் தம்பதியை ஆசி வழங்குவதாக மோடி குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தின் காரணமாக அந்த குடும்பம் அப்பகுதியில் பிரபலமாகி விட்டது. இது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
English Summary
modi wishes to new married couples in uttarpradesh