"துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


திருச்சி மணப்பாறையில் இரண்டு வயது சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மூன்று நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த 60 மணி நேரமாக தற்போது வரை மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், நேற்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம்  ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ஒரு ஆள் உள்ளே இறங்கும் அளவிற்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகின்றது. ஆனால், கடினமான பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவதில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக  பிரார்த்திக்கிறேன்.சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் பழனிசாமியுடன் உடன் விரிவாகப் பேசினேன். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ". என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi twit about surjeeth


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->