மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக!! இந்திய மக்களுக்காக மோடி வெளியிட்ட பதிவு!! கொண்டாடும் தொண்டர்கள்!!
modi tweet about success in election
கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (மே 23) நாடு முழுவதும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில் இந்திய அளவில் 342 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சி 93 இடங்களிலும், பிற கட்சிகள் 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையான வெற்றியுடன் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றாக இணைந்து வளர்வோம், இணைந்து வளமடைவோம். ஒன்றாக இணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என பதிவு வெளியிட்டுள்ளார்.
மேலும் மே 26ம் தேதி இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது
English Summary
modi tweet about success in election