நாட்டுமக்களிடம் மீண்டும் உரையாற்ற நேரம் குறித்த மோடி.. வெளியான அறிவிப்பு..!!
modi speech to Indian peoples to avoid corona virus
சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவரை 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
இந்தியா முழுவதிலும் கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். மேலும், கடந்த 19 ஆம் தேதி மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பின்னர் பல அதிரடி உத்தரவுகள் அமலான நிலையில், தற்போது மீண்டும் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
modi speech to Indian peoples to avoid corona virus