மோடியின் அடுத்த அல்டிமேட் பிளான்.! உச்சகட்ட பயத்தில் பாகிஸ்தான்.!!
modi speech river water could not give Pakistan
இந்தியாவில் உள்ள காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370 சிறப்பு சட்டத்தை ரத்து செய்தது அடுத்து இந்தியாவின் மீது பாகிஸ்தான் கடுமையான கோபத்தில் இருந்து வருகிறது. மேலும்., காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்து வந்தது. தற்போது அவை கொஞ்சம் குறைந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது தற்போது நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை தக்கவைத்துக் கடுமையான பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்படுத்தி மக்களிடையே வாக்குகளை தொடர்ந்து சேகரித்து வருகிறது.
தற்போது ஹரியானா மாநிலத்தில் உள்ள சாஸ்திரி நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசிய சமயத்தில்., கடந்த 70 வருடங்களாக இந்தியா மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு சொந்தமாக உள்ள நீர் பாகிஸ்தானில் பாய்ந்து செல்கிறது.
இதற்கு மேலாக இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தான் பகுதிக்குச் செல்லாமல் தடுப்போம்., தடுத்து நிறுத்தப்படும். இந்த நீரை விவசாய நிலங்களுக்கும் - மக்களின் வீடுகளுக்கும் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்.
பாகிஸ்தான் நாட்டிற்கு பாயும் நீரின் மீது ஹரியானா மற்றும் ராஜஸ்தான் விவசாயிகளுக்கு போதுமான உரிமை உள்ளது. இதற்கு முன் அரசாங்கங்கள் இதனை தடுத்து நிறுத்தாமல் இருந்துள்ளனர். தற்போது உங்களுக்காக நான் போராடி வருகிறேன். உங்களுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பேசியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
modi speech river water could not give Pakistan