முகம் (அழகின்) ஒளிர்வதின் ரகசியத்தை வெளியிட்ட மோடி.. இப்படி ஒரு காரணமா.?!
modi reveals his face glowingness secret
இந்திய நாடிகளில் உள்ள பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்தது, " பிரதான்மந்திரி பால் புரஸ்கார் விருது " பெற்ற சிறார்களை அவர்களது இல்லத்தில் சென்று சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி. இளம் வயதில் அந்தக் குழந்தைகளின் திறனும், உழைப்பும் தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும், melum அது தனக்கு சக்தியும், உந்துதலும் அளிப்பதாக பேசியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் இரண்டு வகையினர்கள், முதல் வகையினர் ஏதேனும் ஒரு துறையில் வெற்றி பெற்றவுடன், உடனே தலைக்கனம் கொண்டு, யாரோடும் கலந்து பழகாமல் உழைக்க மறந்து தேங்கி நின்று விடுகிறார்கள். மற்றொன்று வகையினரோ தங்களது வெற்றிக்கு கிடைக்கும் பாராட்டுகளைப் பெற்று அதை ஒருபுறம் வைத்துவிட்டு தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
அப்போது, அவர் தனது முக அழகின் ரகசியத்தை கூறியிருந்தார். யாரோ மோடியிடம் உங்கள் முகம் ஒளிர்வதின் ரகசியம் என்ன என்று கேட்டிருந்திருக்கிறார். அதற்கு பதில் அளித்த மோடி, நான் கடுமையாக உழைப்பேன், அப்போது எனது முகம் வியர்க்கும். நான் அந்த வியர்வையொடு முகத்தை மசாஜ் செய்வேன். அதனால் தான் என் முகம் பளிச்சென்று இருக்கிறது என்ற அவர், குழந்தைகளும் ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்க்கும் படியான செயல்களில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.
English Summary
modi reveals his face glowingness secret