இந்திய பிரபலங்களுக்கு அதிரடியாக வேண்டுகோள் விடுத்த மோடி! தேர்தலை முன்னிட்டு மேற்கொண்ட பரபரப்பு நடவடிக்கைகள்.! - Seithipunal
Seithipunal


நாடுதோறும்  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது. இந்நிலையில் தேசிய கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. மேலும் வாக்காளர்கள் அனைவரும்  தங்கள் ஜனநாயக கடமையான வாக்களிப்பதை தவறாமல் நிறைவேற்றும்படி தேர்தல் ஆணையம் இந்திய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

    

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து அதிக வாக்குப்பதிவை பெற்று இந்தியா சிறந்த ஜனநாயக நாடாக  உலக சாதனை படைக்கவேண்டும். மேலும் குடிமக்கள் அனைவரையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அனைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தோனி, விராட் கோலி, சாய்னா நேவால், பிவி சிந்து, சல்மான்கான், அமீர்கான், அக்ஷய்குமார், மோகன்லால், நாகார்ஜூனா , அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, ஆலியா பட் போன்ற   விளையாட்டு, சினிமா, அரசியல், தொலைக்காட்சி  உள்ளிட்ட பல  பிரபலங்களின் த்விட்டேர் பக்கங்களை டேக் செய்து வாக்குப்பதிவை அதிகரிக்க மக்களை ஊக்குவிக்கும்வகையில் தங்களது கருத்துக்களை பரப்புங்கள் என  மோடி பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi request to india vips for give awarness to voting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->