போதைவெறிபிடித்த கணவன்.! குடும்பத்தினர் விபரீதம்., ஆசை மகளை காண சென்ற தந்தைக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


டெல்லி பகுதியில் வசிந்து வந்த கணவர் ஒருவர் குடிபோதையில் தனது சொந்த குடும்பத்தையே வெறிபிடித்து சூறையாடியதால் தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

சுகன் என்பவருக்கு இரண்டு குழந்தைகளும் ப்ரீத்தி என்ற மனைவியும் இருக்கின்றனர். விகார் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிளாட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தவருக்கு திடீரென போதைப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு செல்லாமல் தினமும் குடிப்பதையே தனது தொழிலாக வைத்துள்ளார். 

எனவே, கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு தனது மனைவியுடன் சண்டையிட்ட சுகன் அதிக போதையில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சுத்தியலால் அடித்து கொலை செய்து இருக்கின்றார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். 

மறுநாள் ப்ரீத்தியின் வீட்டிற்கு மகளை காணவந்த பிரித்தியின் தந்தை கதவை தட்டியபோது யாரும் திறக்கவில்லை. இதனால், வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து உள்ளார். 

அங்கே தனது மகளும், பேரக்குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருக்கும் சுகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Missing husband murder his family 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->