கமல் படத்தை பார்த்து தான் இப்படி செய்தேன்.! இளைஞர் பகீர் வாக்குமூலம்.!
men killed using papanasam trick
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’பாபநாசம்’ படத்தை பார்த்து கொலை செய்த வாலிபர் ஒருவர் காவல்துறையிடம் சிக்கி இருக்கின்றார்.
கேரளாவைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். என்பவருக்கு வித்யா என்ற மனைவி இருந்தார். இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது. ஆனால், திருமணமாகி விட்டதால் வேறுவழியின்றி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பிரேம்குமாருக்கு சுனிதா என்ற கள்ளக்காதலி இருந்த விஷயம் வித்யாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யா கணவரிடம் சண்டை போட்டு இருக்கின்றார். பிரேம்குமார் தனது கள்ளகாதலியுடன் இணைந்து மனைவியை போட்டுத்தள்ள திட்டம் தீட்டி இருக்கின்றார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி இருவரும் சேர்ந்து வித்யாவை கொலை செய்து இருக்கின்றனர். அதன் பின் பிணத்தை ஆளரவம் இல்லாத இடத்தில் வீசி விட்டு வித்யாவின் போனை பீகார் செல்லும் ரயில் ஒன்றில் மறைத்து வைத்து இருக்கின்றனர். அதன் பின் தன்னுடைய மனைவியை காணவில்லை என்று பிரேம்குமார் காவல்நிலையத்தில் போலீசில் புகார் அளித்து இருக்கின்றார்.
காவல் துறையினர் வித்யாவின் மொபைல் போனை ட்ரேஸ் செய்த போது அந்த மொபைல் போன் பிகாரில் இருப்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர். ஆனால், காவல்துறை விசாரணையில் உண்மையை கண்டு பிடித்துவிட்டனர். பின்னர் பிரேம்குமாரிடம் விசாரித்த போது, பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் போனை ஒரு வடமாநில லாரியில் தூக்கி எறிவதை பார்த்து தான் போனை ரயிலில் நான் தூக்கி எறிந்தேன் என கூறியுள்ளார்.
English Summary
men killed using papanasam trick