ரத்த ரத்தமாய் வாந்தி., கொரோனா என் புருஷன கொன்னுடுச்சி.! குடிகார கணவனுக்கு மனைவியால் நேர்ந்த விபரீதம்.!
Men killed in puducherry
பெங்களூரு பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவருக்கு சத்யா என்ற மனைவியும், இரு மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர். புதுச்சேரியில் தங்கி கட்டிட வேலை செய்து வரும் மஞ்சுநாதன் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார்.
அப்போது அவருடைய மனைவி சத்யா கரோனா வைரஸ் வந்ததால் அவர் ரத்த வாந்தி எடுக்கிறார் என்று கத்தி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து அவரை மீட்ட அவருடைய மகள் உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்க அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் குடிகார கணவன் ஊரடங்கு காரணமாக 10 நாட்கள் குடிக்காமல் இருந்தால் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் அவருடைய மனைவி அவரை தாக்கியதில் அவர் இறந்து போனது தெரிய வந்துள்ளது.