புதுமாப்பிள்ளைக்கு குடும்பத்தால் ஏற்பட்ட கொடுமை.! கதறும் புதுமணப்பெண்.!
men killed by wife relations
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஹேமன் என்பவர் அவந்தி என்ற பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் பெற்றோரை எதிர்த்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பின்னர் ஹைதராபாத் நகரில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெண்ணின் தாய் மாமா அவரை தொடர்பு கொண்டு பெற்றோர் உடன் இணைத்து வைப்பதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளார்.
காருக்கு செல்லும் ஊருக்கு செல்லும் வழியிலேயே ஹேமனுக்கு சந்தேகம் ஏற்பட அவர் காரிலிருந்து குதித்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். ஹேமனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
கணவன் எங்கு தேடியும் கிடைக்காததால் அவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு புதருக்குள் ஹேமன் பிணமாக கண்டறியப்பட்டுள்ளார். பின்னர், காவல்துறை நடத்திய விசாரணையில் அவனின் பெற்றோர் மற்றும் உறவினர் உட்பட 12 பேர் சேர்ந்து அவந்தியின் கணவனை கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
English Summary
men killed by wife relations