அரைகுறையாக ஆற்றில் மிதந்த உடல்.! அருகில் சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் அஹமது அலி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அந்த பகுதியில் ஓடும் துங்கபத்திரா ஆற்றில் நேற்று காலையில் குளிக்க சென்றுள்ளார். அதன் பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் ஆற்று பகுதிக்கு சென்று ரகமத் அலியை அங்குமிங்கும் தேடி இருக்கின்றனர். 

அப்பொழுது சிறிது நேரத்தில் அவரின் உடல் ஆற்றில் மிதந்து கொண்டிருந்தது. அவர் கொடூரமான முறையில் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், உடலில் இருந்த சில பாகங்களையும் காணவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து உடலை கைப்பற்றினர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் அவரை முதலை கடித்து கொன்று அவருடைய உடல் பாகங்களைத் தின்று இருப்பது தெரியவந்துள்ளது. 

ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபரை முதலை கடித்து கொலை செய்து தின்று இருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men death in karnataka pallari


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->